×

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 66 புள்ளிகள் உயர்வுடன் 73,872 புள்ளிகளில் நிறைவு..!!

மும்பை: வர்த்தகம் தொடங்கியதிலிருந்தே ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் உயர்ந்து முடிந்தன. பிற்பகல் வர்த்தகத்தின் போது மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் 184 புள்ளிகள் உயர்ந்து 78,990 புள்ளிகளை தொட்டது. எனினும் வர்த்தக நேரம் முடிவில் சென்செக்ஸ் 66 புள்ளிகள் உயர்வுடன் 73,872 புள்ளிகளில் நிறைவடைந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 67 புள்ளிகள் அதிகரித்து 22,400 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுபெற்றது.

என்டிபிசி பங்கு 3.5%, பவர்கிரிட் பங்கு 2.6%, ரிலையன்ஸ் பங்கு 1%, பஜாஜ்ஃபின் செர்வ், ஆக்சிஸ் வங்கி பங்குகள் தலா 0.9% விலை உயர்ந்தது. ஐசிஐசிஐ வங்கி, டெக் மகிந்திரா, பார்த்தி ஏர்டெல், இண்டஸ்இண்ட் வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ் பங்குகளும் விலை உயர்ந்தன. JSW ஸ்டீல், எம்&எம், டாடா ஸ்டீல், அல்ட்ராடெக் சிமெண்ட், இன்போசிஸ் பங்குகள் விலை குறைந்து விற்பனையாயின.

The post மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 66 புள்ளிகள் உயர்வுடன் 73,872 புள்ளிகளில் நிறைவு..!! appeared first on Dinakaran.

Tags : BSE ,Sensex ,MUMBAI ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 260 புள்ளிகள் உயர்வு..!!